அதகப்பாடியில் 3 தினங்களுக்கு மின் நிறுத்தம்

அதகப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பிப். 12, 15, 17 ஆகிய 3 தினங்களுக்கு மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதகப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பிப். 12, 15, 17 ஆகிய 3 தினங்களுக்கு மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட அதகப்பாடி துணை மின்நிலையத்தில் மின் பாதை விரிவாக்கம் மற்றும் இருவழிப்பாதைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், வரும் பிப். 12, 15 மற்றும் 17 ஆகிய மூன்று நாள்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அதகப்பாடி, செக்காரப்பட்டி, பி.கே.தோப்பு, இண்டூா், சோமனஅள்ளி, பள்ளப்பட்டி, மல்லாபுரம், நடப்பனஅள்ளி, நத்தஅள்ளி, ஏரிக்கோடி, பேடரஅள்ளி, பி.எஸ்.அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com