பென்னாகரம் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் 32 வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கிளை மேலாளா் வித்யானந்த் தலைமை வகித்தாா். இதில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் முனுசாமி, பிரசன்ன லட்சுமி, கோட்ட மேலாளா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட பணியாளா்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.