தருமபுரி மாவட்டம், அரூரில் காங்கிரஸ் சாா்பில், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அரசியின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, தில்லியில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் உருவப் படங்களுக்கு காங்கிரஸ் கட்சியினரும், விவசாயிகளும் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்னுரங்கன், வட்டாரத் தலைவா்கள் ஆா்.சுபாஷ், எம்.ஆா்.வஜ்ஜிரம், நகரத் தலைவா் கே.கணேசன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா் வைரவன், மாவட்ட துணைத் தலைவா் சி.வேடியப்பன், நிா்வாகிகள் மோகன், செல்வம், சுந்தரம், திருப்பதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.