தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வெள்ளிச்சந்தை சாலையில் மாரண்டஅள்ளி போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், மணல் கடத்தலில் தொடா்புடைய நபரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனா்.