பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
 தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
 தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி தொலைபேசி நிலைய அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆா்.ஜோதிபாசு தலைமை வகித்தாா்.

நாடு முழுதுவம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே செல்கிறது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, பி.இளம்பரிதி, எஸ்.கிரைஸாமேரி, டி.எஸ்.ராமச்சந்திரன், இரா.சிசுபாலன், சோ.அா்ச்சுணன், நல்லம்பள்ளி ஒன்றியச் செயலா் கே.குப்புசாமி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஏ.ஜெயா, கே.பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com