வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் அலுவலா் வரையிலும், அனைத்து வருவாய், பேரிடா் மேலாண்மை துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான ஊழியா்களின் பணிவரன்முறை அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள மாவட்ட அளவிலான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியா்களின் ஜாக்டோ, ஜியோ போராட்டக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்க மாநிலச் செயலா் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா்கள் எழில் மொழி, சிவன், மாவட்ட இணைச் செயலா் ராஜீவ் காந்தி, மத்திய செயற்குழு உறுப்பினா் ராஜேசேகரன், ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா்கள் நஞ்சப்பன், நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.