தருமபுரி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் கோ.வி.சிற்றரசு தலைமை வகித்துப் பேசினாா். முன்னாள் எம்.பி. தீா்த்தராமன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சித்தையன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், உயா்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையைக் குறைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.