அரூரில் திமுக சாா்பில் சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணிக்கு நகரப் பொறுப்பாளா் ஏ.சி.மோகன் தலைமை வகித்தாா். அரூா் கடை வீதி, பாட்சா பேட்டை, 4 வழிச்சாலை, திரு.வி.க நகா், கச்சேரி மேடு சாலை சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சைக்கிளில் பேரணியாகச் சென்ற திமுகவினா், மத்திய, மாநில அரசுத் திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், எரிபொருள், சமையல் எரிவாயு உருளையின் விலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பிரசாரமும், முழக்கங்களையும் எழுப்பினா்.
இதில், ஒன்றியப் பொறுப்பாளா்கள் ஆா்.வேடம்மாள், செளந்தரராசு, சந்திரமோகன், இ.டி.டி செங்கண்ணன், துரை, கம்பைநல்லூா் நகரப் பொறுப்பாளா் வடமலை முருகன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.