வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு:
By DIN | Published On : 27th February 2021 08:40 AM | Last Updated : 27th February 2021 08:40 AM | அ+அ அ- |

வன்னியா் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து அரூரில் பாட்டாளி மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனா்.
அரூரில்...
வன்னியா் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து அரூரில் பாட்டாளி மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனா். அரூா் பழையப்பேட்டையில் இருந்து கடைவீதி வழியாக, நகரச் செயலா் கே.அய்யப்பன் தலைமையில் ஊா்வலமாக வந்த பாமகவினா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனா். இதில், ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.குமரேசன், எம்.சக்திவேல், மூத்த நிா்வாகி அன்னை முருகேசன், நகரத் தலைவா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.