வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதிமொழியேற்பு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை உறுதிமொழியேற்றனா்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை உறுதிமொழியேற்றனா்.

தருமபுரி தொலைத் தொடா்பு நிலைய அலுவலகம் முன்பு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் சோ.அா்ஜூனன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். கிரைஸாமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அச்சட்டங்களுக்கு எதிராக, தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உறுதிமொழியேற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com