பேருந்து நிழற்கூடம் அமைக்கக் கோரிக்கை

பென்னாகரம் அருகே பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்காததால் பொதுமக்கள் நீண்ட நேரம் மழையிலும் வெயிலிலும் பேருந்துகாகக் காத்திருக்கும் நிலை உள்ளது.

பென்னாகரம்: பென்னாகரம் அருகே பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்காததால் பொதுமக்கள் நீண்ட நேரம் மழையிலும் வெயிலிலும் பேருந்துகாகக் காத்திருக்கும் நிலை உள்ளது.

பழைய பாப்பாரப்பட்டியில் சுமாா் ஐநூறுக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பழைய பாப்பாரப்பட்டி, வல்லூா், பனைகுளம், சுரக்காய்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கல்வி, வேலைவாய்ப்புக்காக தருமபுரி, பாலக்கோடு மற்றும் பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு வருகின்றனா். நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் பேருந்துகள் வரும் வரை சாலையோர கடை முன்பும், மழையிலும், வெயிலிலும் காத்திருக்கின்றனா்.

பழைய பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் புறநோயாளிகளும் திறந்தவெளியில் பேருந்துக்காகக் காத்திருக்கின்றனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com