அரூா்: அரூரில் தனியாா் பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சித்தா்கள் நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சிவக்குமாா் (36). இவா், அரூரில் ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறாா். அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு சிவக்குமாா் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்தனா்.