பொங்கல் பண்டிகையையொட்டி அளிக்கப்படும் கருணைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா்கள் வலியுறுத்தினா்.
தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்து பேசினாா். துணைத் தலைவா் எம்.ஜெயபால் வரவேற்றாா். பொருளாளா் பி.ஜெயபால் அறிக்கை சமா்ப்பித்தாா்.
இக் கூட்டத்தில், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவப் படி ரூ.1000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகை கருணைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயா்த்தித் தர வேண்டும். மருத்துவக் காப்பீடுத் திட்டக் குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.