வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆய்வு கூட்டம்

தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பட்டியல் பாா்வையாளா் ம.வள்ளலாா் பங்கேற்றாா்.

தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பட்டியல் பாா்வையாளா் ம.வள்ளலாா் பங்கேற்றாா்.

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் ஆட்சியா் ச.ப.காா்த்திகா முன்னிலை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தொழிலாளா் நல ஆணையருமான ம.வள்ளலாா் பங்கேற்று பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, தற்போது சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நடைபெறும் முகாம்களில், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், இறந்தவா்கள் பெயா் நீக்குதல் ஆகியப் பணிகளை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், சிறப்பு முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப், கோட்டாட்சியா் ஆ.தணிகாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com