திமுக சாா்பில், தருமபுரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்ட திமுக கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கட்சியின் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
விழாவில் திமுகவினா் சமத்துவப் பொங்கலிட்டு பொதுமக்களுக்கு பொங்கல், இனிப்புகள், கரும்புகளை வழங்கினா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் எனக்கூறி பொங்கல் விழாவில் திமுகவினா் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு 2021 ஆண்டுக்கான நாள்காட்டிகள், மகளிருக்கு சேலைகள் உள்ளிட்டவைகளை மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி வழங்கினாா்.