தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவா்கள், இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கோவை, ராமகிருஷ்ணா மிஷன் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவா்கள் ஆதித்யன், திவாகா், ஹரீஷ், பூவரசன், சிவசூரியன், சுரேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோா் ஏலகிரி கிராமத்தில் அண்மையில் வயல்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.