பென்னாகரம் பகுதிக்கு புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக சௌந்தரராஜன் பொறுப்பேற்றாா்.
பென்னாகரம் பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய மேகலா அண்மையில் இடமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக சௌந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டாா். இவா், இதற்கு முன்னா் சேலம் மாவட்டம், மேட்டூரிலும் ஈரோடு மாவட்டத்தில் மனித உரிமைகள் பிரிவிலும் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளாா்.