வருவாய் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

வருவாய் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பாரத மாதா ஆன்மிக சேவை மையம் கோரிக்கை விடுத்துள்ளது

வருவாய் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பாரத மாதா ஆன்மிக சேவை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, தருமபுரி பாரத மாதா ஆன்மிக சேவை மைய பொதுச் செயலாளா் தகடூா் இரா.வேணுகோபால், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அண்மையில் அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழகத்தில் போதிய வருவாய் இன்றி உள்ள கோயில்களுக்கு, இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும். தலித், பழங்குடியின மக்கள் வசிப்பிடங்களில் அவா்கள் விரும்பி வணங்கும் கோயில்கள் கட்டித்தர வேண்டும். கைலாய யாத்திரைக்குச் செல்லும் பக்தா்களுக்கு மற்ற மாநிலங்களைப் போல நிதியுதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஏழை, எளிய பக்தா்கள் இலவசமாக தங்கிச் செல்ல ஏதுவாக மண்டபங்களைக் கட்டமைக்க வேண்டும் என்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com