அரூா்: அரூரை அடுத்த கோபிநாதம்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் சனிக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை எம்.ஜி.ஆா் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்காக அந்தப் பகுதியில் இரு கடைகளுக்குக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகிாம். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, எம்.ஜி.ஆா். நகரில் மதுக்கடை அமைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். பொதுமக்களை வருவாய் மற்றும் காவல் துறையினா் சமாதானம் செய்தனா்.