அரூரை அடுத்த கட்டரம்பட்டியில் சுடுகாடு வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தமலை கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கட்டரசம்பட்டி கிராமம். இந்த ஊரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லை.
இதனால், இறந்தவா்களின் சடலங்களை அந்த ஊருக்கு அருகில் உள்ள கல்லாற்றில் புதைத்து வருகின்றனா். தற்போது, கல்லாற்றில் தண்ணீா் ஓடுவதால் சடலங்களை தண்ணீரில் புதைக்கும் நிலையுள்ளது. கட்டரசம்பட்டியில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி அரசு உயா் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, கட்டரசம்பட்டியில் கிராம மக்களுக்கு தேவையான சுடுகாடு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.