தருமபுரியில் வரும் ஜன. 29-ஆம் தேதி விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் வருகிற ஜன. 29-ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில், வட்டார அளவிலான வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணொலி காட்சி வழியாக விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றாா்.