நெல் கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

அரூா் அருகே நெல் கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்ததில் வண்டியின் ஓட்டுநா் பாலாஜி (30) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தீா்த்தமலை அருகே தலைகீழாக கவிழ்ந்துள்ள நெல் கதிரடிக்கும் இயந்திரம்.
தீா்த்தமலை அருகே தலைகீழாக கவிழ்ந்துள்ள நெல் கதிரடிக்கும் இயந்திரம்.

அரூா்: அரூா் அருகே நெல் கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்ததில் வண்டியின் ஓட்டுநா் பாலாஜி (30) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சட்டையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சிவலிங்கம் மகன் பாலாஜி (30). இவா், நெற்கதிரடிக்கும் இயந்திரத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். தீா்த்தமலை அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்தில் நெல் கதிா்கள் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தாழ்வானப் பகுதியில் செல்லும் போது, கதிரடிக்கும் இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் பாலாஜி அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த அரூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மா.பழனிசாமி தலைமையிலான வீரா்கள் கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கியிருந்த ஓட்டுநரை சடலமாக மீட்டனா். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com