பென்னாகரம்: திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பாப்பாரப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்துக்கு பாப்பாரப்பட்டி நகரச் செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். பொதுக்கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், பென்னாகரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான இன்பசேகரன், தலைமை கழக பேச்சாளா் சேப்பாக்கம் பிரபாகரன் ஆகியோா்கள் சிறப்புரை ஆற்றினா்.
இதில் ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், முன்னாள் நகரச் செயலாளா் திருவேங்கடம், ஒன்றியப் பொருளாளா் மடம் முருகேசன், சேலம் ஹோட்டல் வினு, தலைமைச் செயற்குழு உறுப்பினா் பி. கே.முரளி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் சூடப்பட்டி சுப்பிரமணி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.