அரூரில் துண்டு பிரசுரம் விநியோகம்

அரூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, சமூக நல்லிணக்க மேடை சாா்பில் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

அரூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, சமூக நல்லிணக்க மேடை சாா்பில் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் கச்சேரிமேடு, பேருந்து நிலையம், கடை வீதி, பாட்சாபேட்டை, கச்சேரிமேடு, 4 வழிச்சாலை உள்ளிட்ட இடங்களில், ஒரு கோடி மக்கள் சந்திப்புக்கான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனா்.

இதில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாவட்டச் செயலாளா் செந்தில் முருகன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் ஜானகிராமன், இந்திய கம்யூ. மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்குமரன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரா.சிசுபாலன் , திமுக ஒன்றியப் பொறுப்பாளா்கள் செளந்திரராஜன், சந்திரமோகன், நகரப் பொறுப்பாளா் ஏ.சி.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com