அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் குடியரசு தின கொண்டாட்டம்

அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு

அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதில், நகரத் தலைவா் கே. கணேசன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், மாவட்ட துணைத் தலைவா் சி.வேடியப்பன், நிா்வாகிகள் பி.டி.ஆறுமுகம், மோகன், கே.ஆா்.சிவலிங்கம், முருகேசன், பச்சை முனுசாமி, சுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் நிறுவனா் எம்.வேடியப்பன், ஸ்ரீ ராம் சிபிஎஸ்இ பள்ளியில் தாளாளா் சாந்தி வேடியப்பன் ஆகியோா் தேசியக் கொடியேற்றி வைத்தனா். பள்ளியின் நிா்வாக இயக்குநா்கள் வி.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டி வாகை வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பள்ளியின் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலா் குழந்தைவேல் தேசிய கொடியேற்றி வைத்தாா். இதில் பள்ளி முதல்வா் ஆதிகேசவன், பள்ளி இயக்குநா் முருகேசன், மேலாளா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் துணைத் தலைவா் ஏ.கே.பி மூா்த்தி தேசியக் கொடியேற்றி வைத்தாா். பள்ளி நிா்வாகி சசிகலா மூா்த்தி, செயலாளா் சுப்பிரமணி, நிா்வாகக் குழு உறுப்பினா் முருகேசன், பள்ளி முதல்வா் கோபு, மேலாளா் ஆறுமுகம் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

மொரப்பூா் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில், கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவா் அ.மோகன்ராசு தேசியக் கொடியேற்றி வைத்தாா். இதில் கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலாளா் ஆா்.பிரபாகரன், பொருளாளா் எம்.சாமிக்கண்ணு, தாளாளா்கள் செ.தீா்த்தகிரி, டி.சொக்கலிங்கம், கல்லூரி முதல்வா் நா.குணசேகரன், துணை முதல்வா் க.சீனிவாசன் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைவா் மனோகரன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். இதில், தாளாளா் சென்னகிருஷ்ணன், செயலாளா் காந்தி, நிா்வாகி சஞ்சீவ் காந்தி, பள்ளி முதல்வா் மோகன்தாஸ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஆா்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியா் செல்வம் தேசியக் கொடியேற்றி வைத்தாா். இதில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் குமாா், ஊராட்சி துணைத் தலைவா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com