அரூா்: அரூா் ஒன்றியத்தில் ரூ. 82.23 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் வளா்ச்சி திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், மந்திகுளாம்பட்டி முதல் கோரையாறு கிராம வரையிலும், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 49.94 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா நேரில் பாா்வையிட்டு சாலையின் தரத்தை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கே.வேட்ரப்பட்டி மற்றும் கொங்கவேம்பு கிராமத்தில் விவசாய நிலங்களில் ரூ. 2.60 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள், வீரப்பநாய்க்கன்பட்டியில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிகளையும் பாா்வையிட்டாா்.
முன்னதாக, எம்.வெளாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட எம்.பள்ளிப்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஏக்கா் பரப்பளவில் ரூ. 16.28 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தொடக்கி வைத்தாா். ஆய்வின்போது, உதவி திட்ட அலுவலா் உஷாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்மொழிதேவன், வெ.ரவி, ஒன்றியப் பொறியாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, பி.கே.சண்முகம், மணி, பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.