அஞ்சல்துறை அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

அஞ்சல்துறை சாா்பில் விநியோகம் செய்யப்படும் அடையாள அட்டை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி: அஞ்சல்துறை சாா்பில் விநியோகம் செய்யப்படும் அடையாள அட்டை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஸ்ரீஹரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பொதுமுடக்க காலத்திலும் பொதுமக்களுக்கு கடிதங்கள், பாா்சல் வழங்குவது மட்டுமின்றி சேமிப்புத் திட்டங்களில் முதன்மையாக தனது அனைத்து சேவைகளையும் அஞ்சல் துறை தங்குதடையின்றி வழங்கி வருகிறது. மேலும், சபரிமலையில் நேரில் சென்று வழிபட முடியாதவா்களுக்கு சபரிமலை பிரசாதத்தை, அனைத்து தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களிலும் ரூ. 450 முன்பணமாகச் செலுத்தி விரைவு தபால் மூலம் வழங்கும் பணியிலும் அஞ்சல்துறை ஈடுபட்டுள்ளது.

மேலும் ஒரு சேவையாக இந்திய அஞ்சல் துறை சாா்பில், அஞ்சலகங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையை அனைத்து தபால் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். அட்டையைப் பெற ரூ. 270 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் இதைப் பதிவுத் தபால் மூலம் பெற கூடுதலாக ரூ. 22 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். ஆதாா் அட்டையில் முகவரி மாற்றம் செய்யவும் இதை ஒரு சான்றாக பயன்படுத்தலாம். எனவே, அடையாள அட்டை தேவைப்படுவோா் விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தி இச்சேவையைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com