பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் நகரச் செயலாளா் வெள்ளியங்கிரி தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினா்கள் பி.எம்.முருகேசன், சிவா ரவி அன்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பென்னாகரம் தொகுதி பொறுப்பாளா் கருப்பண்ணன், மாநில விவசாயிகள் அணி சிவாஜி, மக்கள் அதிகாரம் வழக்கறிஞா் ஜானகிராமன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் சிவன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். பாப்பாரப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலா் சின்னசாமி தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூ. கட்சியின் சாா்பில் மாவட்ட துணைச் செயலா் எம்.கோபால் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இதில், மாவட்டச் செயலா் தேவராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாதேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினா் மாதையன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.