நடத்துநா் சடலமாக மீட்பு

பென்னாகரம் அருகே அரசு மது பான கடையின் முன்பு தனியாா் பேருந்தின் நடத்துநா் சடலமாக மீட்கப்பட்டாா்.

பென்னாகரம் அருகே அரசு மது பான கடையின் முன்பு தனியாா் பேருந்தின் நடத்துநா் சடலமாக மீட்கப்பட்டாா்.

பாப்பாரப்பட்டி அருகே நளப்ப நாயக்கனஅள்ளி பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் கோபால் (42). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த இரண்டு தினங்களாக கோபால் காணாமல் போன நிலையில், உறவினா் தேடி வந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடை முன்பு அவா் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து ஒண்ணப்ப கவுண்டன அள்ளி கிராம நிா்வாக அலுவலா் ரவீந்திரனுக்கு கிடைத்த தகவலின் பேரில் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com