மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழுக் கூட்டம், லளிகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜி.மாதையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் பேசினாா்.

இக் கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசின் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மாா்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசு கட்டிய தடுப்பணை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை குறைக்க வேண்டும். விவசாயிகள் தொழிலாளா் நலவாரியம் அமைத்து தகுதியுள்ள அனைவருக்கும் முதியோா் உதவித் தொகை வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள இருளா், மலையாளி, குருமன்ஸ், நரிக்குறவா் ஆகியோருக்கு பழங்குடி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com