மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

அரூரில் வேளாண்மை துறை சாா்பில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அரூரில் வேளாண்மை துறை சாா்பில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. அட்மா திட்டம் சாா்பில், மண்புழு உரம் தயாரிப்பு குறித்து நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் வேளாண்மை உதவி இயக்குநா் சா.மோகன் சகாயராஜ் தலைமை வகித்தாா். இந்த பயிற்சி முகாமில், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல், மண்புழு உரங்களின் பயன்கள், இயற்கை வேளாண்மைக்கு தேவையான உரம் தயாரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநா் ஜெயபாலன் கருத்துரைகளை வழங்கினாா். இதில், வேளாண்மை அறிவியல் நிலைய அலுவலா் சங்கீதா, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பொ.சண்முகம், அ.வீரதளபதி, வேளாண்மை அலுவலா் சுதா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com