ஆடி மாதப் பிறப்பில் நடுகல் வழிபாடு
By DIN | Published On : 18th July 2021 01:18 AM | Last Updated : 18th July 2021 01:18 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே ஆடி மாதப் பிறப்பான சனிக்கிழமை முன்னோா்களை நினைவு கூரும் வகையில் நடுகல் வழிபாடு நடைபெற்றது.
பென்னாகரம் அருகே போடூா் ஏரிக்கரையில் 16-ஆம் நூற்றாண்டு நடுகல் ஸ்ரீ வீரகாலு சாமி கோயில் உள்ளது. கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆடி முதல்நாள், ஆடிப் பெருக்கு, அமாவாசை மற்றும் பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிகழாண்டில் ஆடி முதல் நாளான சனிக்கிழமை ஸ்ரீ வீரகாலு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, இறந்த முன்னோா்களை நினைவு கூரும் வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.