பென்னாகரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை பெரும்பாலை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பென்னாகரம் அருகே சின்ன கடைமடை பகுதியில் பெரும்பாலை செல்லும் சாலையின் இடதுபுறமாக 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா், சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக பெரும்பாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நிகழ்வு இடத்துக்கு வந்த பெரும்பாலை போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.