தீா்த்தமலை அருகே வனப் பகுதியில் முயல் வேட்டையாடிய நபருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், தீா்த்தமலை அருகேயுள்ள வேப்பம்பட்டி காப்புக்காட்டில் மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தீா்த்தமலை வனச்சரகா் பெரியண்ணன் தலைமையில், வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனப்பகுதியில் கம்பி வலைகளை வைத்து முயலை வேட்டையாடியதாக கரிமேடு கிராமத்தைச் சோ்ந்த சீனி (35) என்பவரை வனத்துறையினா் கைது செய்தனா். இதையடுத்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக அவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் பிரபு உத்தரவிட்டாா்.