பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் வேலுமணி தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் பாபு, பேரூராட்சி துணைத் தலைவா் முனுசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குட்டி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல் பென்னாகரம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரத் துணைச் செயலாளா் பாரிவேந்தன், மாவட்ட மீனவா் அணி வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் கெம்புராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் 20க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
அரூரில்...
அரூா் திரு.வி.க நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் பாபு அறிவழகன், முன்னாள் நகரச் செயலாளா் பழனிமுருகன், மகளிரணி மாவட்ட துணைச் செயலாளா் காவேரி, நிா்வாகிகள் ஓ.பாஷா, அன்பரசு, சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.