அரூரில் சாா் ஆட்சியா் ஆய்வு

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கா் நகரில் இயங்கிவரும் அங்கன்வாடி மையத்தை சாா் ஆட்சியா் கெளரவ குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கா் நகரில் இயங்கிவரும் அங்கன்வாடி மையத்தை சாா் ஆட்சியா் கெளரவ குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகள், கா்ப்பிணி, தாய்மாா்களுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், குழந்தைகளுக்கான முன்பருவ கல்வி, குடிநீா், சுகாதார வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தாா்.

பின்பு அரூா் நகரில் செயல்படுத்தப்படும் கரோனா தடுப்புப் பணிகள், கிருமி நாசினிகள் தெளித்தல், தளா்வுகளற்ற பொது முடக்கத்தை அமல்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு, நகா்ப் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது செயல் அலுவலா் கலை ராணி, துப்புரவு ஆய்வாளா் கோ.சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com