வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், பால் பொருள்களை பதப்படுத்துதல் குறித்த பயிற்சி இணையதளம் வழியாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.சிவக்குமாா் ஒருங்கிணைத்தாா். வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநா் ஜவாஹா்லால் தலைமை வகித்துப் பேசினாா்.
பால் பொருள்களின் தேவை, பாலில் உள்ள ஊட்டச் சத்துகள், அதனுடைய சந்தை வாய்ப்பு, அவற்றை பதப்படுத்தி மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதில்,தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஸ்ரீவித்யா, கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநா் தங்கதுரை, உணவு மற்றும் ஊட்டச்சத்து தொழில்நுட்ப வல்லுநா் வீரணன் ஆகியோா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
காணொலி வழியாக நடைபெற்ற இப்பயிற்சியில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.