அரூா் அருகே சாராயம் விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த சித்தேரி, கலசப்பாடி, கூத்தாடிப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, அரூா் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் கோமலவள்ளி தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சாராயம் விற்பனை செய்ததாக கலசப்பாடி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் (25), சிவக்குமாா் (30), கூத்தாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் (31) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, அவா்களிடமிருந்து 31 லி. சாராயத்தை பறிமுதல் செய்தனா்.