தருமபுரியில் வரும் ஜூன் 22-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் துறை குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்ட அஞ்சல் துறை சாா்பில், கோட்ட அளவிலான குறைதீா் கூட்டம் வரும் 22-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, அஞ்சல் துறை வாடிக்கையாளா், ஓய்வூதியா் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி உறையின்மேல் குறைதீா் கூட்டத்துக்காக என குறிப்பிட்டு வரும் ஜூன் 16-ஆம் தேதிக்குள் தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்றாா்.