பென்னாகரம் அருகே மடம் பகுதியில் நடைபெற்ற சட்ட நகல் எரிக்கும் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலா் முருகன் தலைமை வகித்தாா்.
இதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து அதன் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பகுதிக்குழு உறுப்பினா் சின்னக்கவுண்டா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் ஜீவானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.