தருமபுரி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவா்களின் பாதுகாவலா்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளா்கள் ஆகியோருக்கு மதிய உணவுப் பொட்டலங்களை அக் கட்சியினா் வழங்கினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கிரைஸாமேரி, டி.எஸ். ராமச்சந்திரன், நகரச் செயலாளா் ஆா்.ஜோதிபாசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.