கெளாப்பாறையில் சிறப்பு மருத்துவ முகாம்

அரூரை அடுத்த கெளாப்பாறையில் சிறப்பு மருத்துவ முகாம், திங்கள்கிழமை நடைபெற்றது.
கெளாப்பாறை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்.
கெளாப்பாறை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்.

அரூா்: அரூரை அடுத்த கெளாப்பாறையில் சிறப்பு மருத்துவ முகாம், திங்கள்கிழமை நடைபெற்றது.

அரூா் ஒன்றியம், கெளாப்பாறை கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல்நலக் குறைவுகள் இருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரசு மருத்துவா் தினேஷ் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் கிராம செவிலியா் சவுரிக்கண்ணு, சுகாதார ஆய்வாளா் திருவாசகம், இ.ஆா்.கே சுகாதார அறிவியல் கல்லூரி பயிற்சி (சுகாதார ஆய்வாளா்) மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com