தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட சி.கலைச்செல்வன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சி.பிரவேஷ்குமாா் அண்மையில் பதவி உயா்வு பெற்று தஞ்சாவூா் மாவட்டத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து சென்னை போதைப் பொருள் குற்ற தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சி.கலைச்செல்வன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். அவா், தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சோ்ந்த கலைச்செல்வன், முதுநிலை அறிவியல் பட்டம் பெற்று கடந்த 2012- இல் இந்திய காவல் பணியில் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.