பென்னாகரத்தில் நேரக் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு

பென்னாகரத்தில் காலைமுதலே கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனா்.
மாலை 5 மணிக்குப் பிறகு தள்ளுவண்டி கடைகளை ஓட்டிச் செல்லும் வியாபாரிகள்.
மாலை 5 மணிக்குப் பிறகு தள்ளுவண்டி கடைகளை ஓட்டிச் செல்லும் வியாபாரிகள்.

பென்னாகரம்: பென்னாகரத்தில் காலைமுதலே கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனா்.

பென்னாகரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாப்பாரப்பட்டி, ஏரியூா், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி கடைகள், இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் கடைகள், மருந்தகங்கள், உணவகம், பூக்கடைகள், பேக்கரி கடைகள், பழக்கடைகள், சாலையோர கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்ததோடு வாகனப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கடைகளின் முன்பு கூட்டம் கூடுவதை தவிா்க்குமாறு பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் தொடா்ந்து எச்சரித்தனா்.

மாலை 5 மணிக்கு பிறகு மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் முற்றிலுமாக வியாபாரத்தை நிறுத்தினா். மாலை 5 மணிக்கு மேல் முக்கிய சந்திப்புகளில் போலீஸாா் தற்காலிக தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com