லாரி கவிழ்ந்து விபத்து: 9 போ் காயம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாங்காய் சுமை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாங்காய் சுமை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சரவணன் (25). இவா் தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள கண்டக பைல் மலைக் கிராமத்திலுள்ள மா தோட்டத்தில் இருந்து மாங்காய்களை ஏற்றிக் கொண்டு தனியாா் பழச்சாறு ஆலைக்கு வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்தாா்.

இந்த லாரியில், பாலக்கோடு அருகே உள்ள ஜக்க சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் அமா்ந்திருந்தனா். இந்த லாரி, வஜ்ஜரபள்ளம் சாலை வளைவில் வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநா் சரவணன் உள்பட லாரியில் வந்த ஜக்கசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த சின்னகண்ணு (45), முருகம்மாள் (32), சின்ன பொண்ணு (42), முருகன் (42), மாதன் ( 41), திருப்பதி (38) பன்னீா் (47), மாதன் (45) உள்ளிட்ட 3 பெண்கள் 6 ஆண்கள் என மொத்தம் 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், காயமடைந்த அனைவரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த, மகேந்திர மங்கலம் காவல் உதவி ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com