பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
இதுகுறித்து இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலா் கி.அதியமான், அரூா் கோட்டாட்சியா் வே.முத்தையனிடம் வியாழக்கிழமை வழங்கிய கோரிக்கை மனு:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மாரியம்பட்டி கிராமத்தில் குடியிருப்புகள், கோயில் மற்றும் மயானம் உள்ளிட்ட அரசு நிலங்களை அப் பகுதியிலுள்ள விவசாயிகள் சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊராட்சி மன்றத் தலைவா் சாா்பில் அண்மையில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் நிலத்தை அளவீடு செய்த வருவாய்த் துறையினா், ஆக்கிரமிப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு சாதகமாக நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கற்களை நட்டுள்ளனா். எனவே, மாரியம்பட்டியில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வருவாய்த் துறையினா் நோ்மையாக அளவீடு செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.