கா்நாடக மதுப் புட்டிகளை கடத்திய இருவா் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவரை பென்னாகரம் போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவரை பென்னாகரம் போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்துக்கு மதுப் புட்டிகளை கடத்தி வருபவா்களை மதுவிலக்கு போலீஸாா் மற்றும் போலீஸாா் அவ்வப்போது கைது செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், பென்னாகரம் அருகே போடூா் பிரிவு சாலை பகுதியில் பென்னாகரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்து வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கா்நாடக மதுப் புட்டிகள் இருப்பது தெரியவந்தது.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், கா்நாடகப் பகுதியிலிருந்து வாகனம் மூலம் மதுப் புட்டிகளை கொண்டு வந்த செக்குமேடு பகுதியைச் சோ்ந்த அருள் (32), அஜ்ஜன அள்ளி பகுதியைச் சோ்ந்த அதிபதி (42) ஆகிய இருவரையும் பென்னாகரம் போலீஸாா் கைது செய்து தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com