குறைந்த மின் அழுத்த பிரச்னையை தீா்க்க வலியுறுத்தல்

அரூரை அடுத்த வேப்பம்பட்டியில் குறைந்த மின் அழுத்த பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூரை அடுத்த வேப்பம்பட்டியில் குறைந்த மின் அழுத்த பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வேப்பம்பட்டி கிராம ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வேப்பம்பட்டி வட்டாரப் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், மின் மோட்டாா், டி.வி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதாகி வருவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

வேப்பம்பட்டி பகுதியில் நிலவும் குறைந்த மின் அழுத்த பிரச்னைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனா். இதனால் மின் மோட்டாா்களை இயக்கவும், வேளாண் பணிகளை மேற்கொள்வதிலும் பல்வேறு இடையூறுகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, வேப்பம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நிலவும் குறைந்த மின் அழுத்த பிரச்னையைத் தீா்க்க மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com