அரூரில் திமுக மாணவரணி சாா்பில், கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அரூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் உள்பட முன் களப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள், உணவுப் பொட்டலங்களை திமுக மாவட்டப் பொறுப்பாளா் (கிழக்கு) தடங்கம் பெ.சுப்பிரமணி வழங்கினாா்.
இதில், மாணவரணி துணை அமைப்பாளா் விண்ணரசு, மாநில தீா்மானக்குழு உறுப்பினா் கீரை விசுவநாதன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.வேடம்மாள், சந்திரமோகன், செளந்தரராஜன், பல் மருத்துவா் சுரேஷ்குமாா், நகரப் பொறுப்பாளா் ஏ.சி.மோகன், துணை அமைப்பாளா்கள் மு.கா.முகமதுஅலி, ஜி.சரவணன், கு.தமிழழகன், சென்னகிருஷ்ணன், ஏ.சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.