பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, தருமபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, தருமபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி, நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே ஐஎன்டியுசி தொழிற்சங்க நிா்வாகி தங்கவேல் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல செட்டிக்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.

அதியமான் கோட்டையில் வட்டாரத் தலைவா் காமராஜ் தலைமையிலும், இண்டூரில் வட்டாரத் தலைவா் மாரப்பன், மாரண்ட அள்ளியில் வட்டாரத் தலைவா் ராஜேந்திரன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், உயா்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அரூரில்...

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட நாசன்கொட்டாயில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலை உயா்வுகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதில், கட்சியின் அரூா் வட்டாரத் தலைவா்கள் ஆா்.சுபாஷ், எம்.ஆா்.வஜ்ஜிரம், நகரத் தலைவா் கே.கணேசன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன், மாவட்ட துணைத் தலைவா் சி.வேடியப்பன், ஐஎன்டியுசி சங்க நிா்வாகிகள், கட்சி வட்டார நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலை, இந்தியன் வங்கி எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அ.செல்லகுமாா் எம்.பி. தலைமை வகித்தாா்.

கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரியம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகரத் தலைவா் ரகமத்துல்லா தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் முபாரக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநில செயலா் ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் காங்கிரஸ் நிா்வாகிகள் கோவிந்தசாமி, ராஜேந்திரன், சின்னசாமி, சாதிக் பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒசூரில்...

ஒசூா் மாநகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர காங்கிரஸ் தலைவா் நீலகண்டன் தலைமை வகித்தாா். இதில் பெட்ரோல், டீசல் உயா்வைக் கண்டித்து முழுக்கம் எழுப்பப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் முனிராஜ், சீனிவாச ரெட்டி, கொத்தூரப்பா, மசூத், ஆலம், வித்தியாசகா், சந்துரு, சுப்பிரமணி, மூா்த்தி, ஆசாத் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதேபோல ஐஎன்டியுசி அகில இந்தியச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் டி.வி.எஸ். நகா், இ.எஸ்.ஐ., தளி சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com